Monday, December 14, 2015
உன் தகுதியை நீயே உரக்கச் சொல் – ஜூலியஸ் சீஸர்
Sunday, December 13, 2015
உங்கள் Facebook ஐ கொண்டு உங்களை அறிந்துகொள்ள ஒரு மென்பொருள். – அறிமுகம்
எந்த device இலும் அழிந்த தரவுகளை மீட்கலாம்.
- எந்தவகை வந்தட்டுக்களுக்கும் இயைபுடையது. (ATA, SATA, SCSI, USB, IEEE1394.)
- iPod இல் இருந்தும் தரவுகளை மீட்க உதவும்.
- FAT12, FAT16, VFAT, FAT32, NTFS/NTFS5, EXT2 மற்றும் EXT3 போன்ற இயக்கங்களுக்கு ஏற்புடையது.
- USB, digital cameras, MP3 player களில் இருந்தும் தரவுகளை மீட்க உதவுகிறது.
- இலகுவான பாவனை அமைப்பு.
- ஒரே சொடுகில் தரவுகளை மீட்க முடியும்.
தரவிறக்க : source1
Friday, December 11, 2015
இணையமில்லா நேரத்திலும் முகநூலை அணுகலாம்
இணையமில்லா சேவைகளை கூகுளின் வரைபட பயன்பாட்டில் தொடங்கியது முதல், அந்த வரிசையில் அடுத்தகட்டமாக முகநூல் அடுத்தபடியாக இணையமில்லாமல் முகநூலை அணுகும் சிறப்பை பயனர்களுக்கு தந்துள்ளது. ஆகையால் இணைய இணைப்புமெதுவாக இருக்கும்போதிலோ அல்லாது நெட்வொர்க்குகள் கிடைக்காத தருணத்திலோ முகநூலில் செய்திகளை எழுதலாம் . மற்றும் செய்திகளுக்கு கருத்துகளையும் தெரிவிக்கலாம். அவையனைத்துமே சரியான இணையதள இணைப்பை பெற்றவுடன் முகநூளில் வெளியிடப்படும். இதனால் 2G இணைப்பையோ அல்லது குறைவான டேடாக்களை மட்டுமே கொண்ட பயனர்களுக்கும் , இணையத்தை அணுக முடியாமல் இருக்கும் பயனர்களுக்கும் பெரிதாக கைகொடுக்கும். முகநூளின் இத்தகைய முயற்சியால் நாம் அவ்வப்போது வெளியிட நினைக்கும் கருத்துக்கள் அனைத்தையும் உடனுக்குடன் ஒரு டைரியில் குறித்து வைப்பது போன்று குறித்து வைத்து பின் இணையமுள்ள நேரங்களில் வெளியிடலாம்.
உதாரணமாக ஒருவரின் பிறந்த நாளன்று வாழ்த்து சொல்ல விரும்புகையில் அவர்களிடம் இணையமில்லாத போது நம் கருத்துகளையும் வாழ்த்துகளையும் எழுதி வைத்தால் அவற்றினை இணையத்தினை அணுகும்போது செய்திகள் வெளியிடப்படும். இதனால் குறிப்பிட்ட அந்த நேரத்தில் இணையமில்லாததால் செய்திகளை அனுப்ப முடியவில்லை என்பதனை புரிந்து கொள்ள முடியும். பயனங்களின் போதான நேரங்களில் பெரும்பாலாக இணையத்தை அணுக முடியாது. அந்த மாதிரி சமயங்களில் கண்டிப்பாக நேரத்தை பயனுள்ளதாக செலவிட உதவும். இதனால் முன்பை விட பயனர்கள் அதிக நேரத்தினை முகநூளில் செலவிட வாய்ப்புள்ளது.
Tuesday, December 1, 2015
அடாப்டின் உதவியுடன் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிற சொந்த தகவல்களை மறைக்கலாம் :
பிடிக்காத அல்லது வேண்டாத ஒரு நபரின் தொடர்பிலிருந்து விலகி இருக்க அவர்களது எண்ணை பிளாக் லிஸ்ட்டில் போடுவது என்பது அனைவரும் அறிந்ததே ! அதுபோலவே நமது சொந்த மொபைல் போனில் ஒருவருக்கு தகவல் அனுப்பும்போது, நம் சம்மந்தப்பட்ட சில விசயங்களை மற்றவர்கள் பார்ப்பதை நாம் விரும்புவதில்லை.அதற்காகவே தனி மனித சுய பாதுகாப்பு கருதியேஅடாப்ட்டின் உதவி கொண்டு பிறருக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிற தகவல்களை மட்டும் மறைத்து அனுப்பலாம்.
உதாரணமாக நாம் புதிதாக மாற்றிய வீட்டு முகவரியை நண்பருக்கு அனுப்பும்போது அவர்களின் சாதனத்தை மூன்றாமவர் ஒருவர் பார்க்கும்போது அதனை எளிதில் எடுத்து தவறாக உபயோகிக்க வாய்ப்புள்ளது. அதனால் இது போன்ற பிரச்சனைகளுக்காகவே அடாப்ட் ஒரு நல்ல வழியினை உருவாக்கித் தந்துள்ளது.
Saturday, November 14, 2015
அதீத நீர் மட்ட உயர்வு அடுத்த நூற்றாண்டுக்குள் 6 மீட்டர் தரை வரை மூழ்கும் அபாயம்.
நாம் நினைப்பதை விட அதிவேகத்தில் கடல் நீர்மட்டம் உயர்ந்துவருவதாக நாசா சமீபத்தில் அச்சம் தெரிவித்துள்ளது.
பூமியின் தரைப்பகுதியில் உருவாகும் வெப்பம் கடல், சமுத்திரங்களின் தரையை அடையும்போது அண்ணளவாக வெள்ளிக்கிரகத்தின் மேற்புற வெப்ப நிலைக்கு ஒப்பாக நிலைகொள்கிறதென அறியப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆண்டுகளில் மாத்திரம் கடல் நீர் மட்டம் 7 cm உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு உயர்வு வீதம் 1.9 mm ஆக உள்ளது.
இதே நிலையில் நீடித்தால் அடுத்த நூற்றாண்டு நடு பகுதியில் சுமார் 6.4 m வரை நீர்மட்டம் உயரும்.
தொழில் சாலைகளின் எண்ணிக்கை அதிக்கை அதிகரிப்பதனாலும் அவற்றின் புகைவெளியீடு மீது திட்டவட்ட நடவடிக்கைகள் இல்லாமையாலும் நீர் மட்ட உயர்வு இன்னும் அதீத வேகத்தில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கிறீன்லாந்து ,அண்டார்டிக்கா பகுதியின் பனிமலைகள் வெப்ப சரிவடைவதே நீர்மட்ட உயர்விற்கு காரணமாக உள்ளது.
அவ் முழு பனி மலைகளும் உருகுமாயின் புவியின் நீர்மட்டம் சுமார் 60 m வரை உயரும்.
அவ்வாறான ஒரு நிலையில் உலக வரைபடத்தில் இருந்து பல நாடுகள் இல்லாமல் போகும்.
நமது பூட்டக்குழந்தை வாழ்வதற்காக, உங்கள் வாகனங்களின் காபன் வெளியீட்டை சரிபார்த்துவிட்டீர்களா?
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு பரவும் புதிய ஆபத்து...! (இலகுவில் நீக்க முடியாதது)
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் பாதிக்கும் புதிய வைரஸ் நிரல்
இந்த வைரஸ் நிரல் ஸ்மார்ட் போன்களுக்கு எவ்வாறு பரவுகின்றன?
இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?
இவற்றில் இருந்து மீளுவது எப்படி?
முன்னேற்பாடுகள் ஏதும் உண்டா?
Friday, November 13, 2015
உணவு அச்சிடும் 3D இயந்திரம்! | எதிர்கால உணவு தயாரிப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முப்பரிமான அச்சு இயந்திரங்கள் (3D Printers) பிரபலமாகத்தொடங்கின. இன்னும் அது முழுமையான பொதுப்பாவணைக்கு வரமுன்னரே இப்போது அதன் அடுத்த கட்டமாக புதிய ஒரு தொழில் நுட்பம் முன்னோட்டமுறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முப்பரிமான உணவு அச்சீட்டு இயந்திரமாக அறிமுகமாகியிருக்கும் இவ் இயந்திரம் உணவுகளை தயாரிப்பதற்கு உதவவுள்ளது. அதாவது, பிரபல ஆங்கில திரைப்படங்கள் சிலவற்றில் எதிர்வு கூறப்பட்ட எதிர்கால உணவு தயாரிப்பு முறைகளுக்கு ஒரு முதல் படி இயந்திரமாக இது உருவாகியுள்ளது.
சாதாரண உணவுகள் அனைத்தையும் இதில் தயாரிக்க முடியாவிட்டாலும் ஆரம்ப கட்டத்தில் சில வகை பழங்களின் சுவையை உடைய உணவுகளை இவ் இயந்திரம் அச்சிடவல்லது!
அதாவது, chocolate, vanilla, mint (புதினா) போன்ற வகை சுவைகளையுடைய பதார்த்தங்களை இது அச்சிடக்கூடியது.
இதன் தயாரிப்பாளர்கள், எதிர் காலத்தில் இவ்வகை இயந்திரங்களால் ஒரு hamburger(ஹம்பேர்கர்) ஐ கூட உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Foodini என அழைக்கப்படும் இவ் இயந்திரம் பற்றிய மேலதிக விபரங்களை கூகுளில் தேடலாம்.
தசாவதாரமும் டார்வினிசமும் ! (Hindusim Vs darwinism)

தசவதாரம் அதில் ஒன்று. தசாவதாரம் நமக்கு சொல்லும் கருத்துகள் இவ்வுலகம் தோன்றியது எப்படி ? மற்றும் அதில் உயிர்கள் எப்படி படிப்படியாக தோன்றின என்பது. இது டார்வின் கோட்பாடான பரிணாம வளர்ச்சியின் அடிப்படை உண்மைகளை நமக்குத்தெரிவிக்கிறது.
இந்திய நாட்டில் வாழ்ந்த பேரறிஞர்கள் தெள்ளத்தெளிவாகவும் பரிணாமக்கொள்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.
பரிணாம வளர்ச்சியின் தோற்றம் நீரிலிருந்து தொடங்குகிறது. முதலில் நீர் பாசி இதிலிருந்து புழு, பூச்சி, நத்தை, மீன், தவளை, ஆமை, பாம்பு, பல்லி, எலி, பெருச்சாளி, பன்றி, கரடி,எருமை,யானை, ஓநாய்,புலி,சிங்கம், முதலிய ஜீவப் பிராணிகள் தோன்றின இறுதியில் குரங்கு. குரங்கிலிருந்து மூதாதையினத்தின் ஒரு பிரிவு கால கிரம வளர்ச்சியின் பின் மனிதன்.
பரிணாம வளர்ச்சி என்பது ஒன்றிலிருந்து ஒன்று என்பதை கவனத்தில் கொள்ளவும்.
73 வருடங்கள் வாழ்ந்த மாமேதை டார்வின் [1809 – 1882]
பற்றி சில தகவல்கள் :

அவரின் கூற்று ‘சத்தியத்தின் உரைக்கல் ஞானம் அல்ல இயற்கைதான் அதற்கு உரைக்கல்’
வைத்தியரான இராமஸ் டார்வின் (சார்லஸ் டார்வினுடைய தாத்தா) லிச்பீல்டு (இங்கிலாந்து) ல் வசித்தவர். உலகின் ஒவ்வொரு ஜீவராசியும் பரிணாம ரீதியில் வளர்ச்சி பெற்றவை என்ற கருத்தை எழுதி வைத்திருந்தார். ( மூன்றாம் ஜார்ஜ் மன்னர் காலத்தவர்) இவரின் மறைவுக்கு (1802) பிறகு பிரஞ்சு நாட்டின் விலங்கியில் வல்லுனர் லாமார்க் இவரின் கருத்துக்களை மூலாதாரமாக வைத்து விலங்கு சாஸ்திர தத்துவம் (1809) முதுகெலும்பு மிருகங்களின் சரித்திரம்.(1815) ஆகிய நூல்களை வெளியிட்டார்.
பரிணாம வளர்ச்சி பற்றி அவர் வகுத்த கொள்கைகள் ஒரே தினத்தில் எழுதப்பட்டவை அல்ல.
1859 ல் சார்லஸ் டார்வின் ஜீவராசிகளின் பரிணாமத் தத்துவத்தை வெளியிட்டார் (ஜீவராசிகளின் மூலம் 230 பக்கங்கள்) உலகின் எல்லா மதங்களும் இந்த தத்துவத்தை எதிர்த்தன. சம்பிரதாயப்பிடிகளை விட்டுவிட எந்த மதமும் ஒப்புக்கொள்ளலாது. அதனால் கண்ணைமூடி மறுதளித்தன. இன்றுவரை அவரின் கொள்கைக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. ஆனால் நிரூபிக்கப் படவில்லை.
இந்து மதத் தத்துவங்களை குறிப்பாக ஆதிகால சிருஷ்டி தத்துவங்கள் சிலவற்றை மற்ற மதங்கள் தத்து எடுத்து கொண்டதாக சொல்கிறார்கள். பழைய ஏற்பாடான விவிலியத்தில் சொல்லப்படும் நோவா கால ஜல பிரளய கதை, ரோமானியர்கள் வணங்கும் நீரஸ் என்ற கடவுள் (மச்சவதாரம் – மீனுடல் மனித தலை) இவை சில உதாரணங்கள் [ … இங்கு தசாவதாரம் – டார்வினிஸத்தை பற்றி எழுதுவதால் இந்த கருத்துக்குள் அதிகம் செல்லவேண்டாம் என நினைக்கிறேன்…]
இயற்கை மீது அதீத பற்று கொண்ட டார்வினின் பல ஆண்டுகால உழைப்பு. பீகிள் எனும் கப்பலில் அவர் மேற்கொண்ட கடற்பயணம்(1831) தென் அமெரிக்க கடற்கரை, பகாஸ் தீவுகள், சாஹீதி,ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, டாஸ்மானியா, மால்டிவ், மொரீசியஸ், செயின் ஹலினா, கேப்வொ தீவுகள், அஸோரஸ், அவரி வியக்க வைத்தது. திரும்ப வரும்போது அவரது பெட்டகத்தில் நிறைய உயிரினங்கள் நிரம்பியிருந்தது. இவற்றை வைத்து பல ஆண்டுகால ஆராய்ச்சியின் முடிவே பரிணாம தத்துவம்.
ஒரு ஆச்சர்யமான தகவல் ” மூட நம்பிக்கைகளுக்கு வேட்டு வைத்த டார்வின் இளவயதில் மதகுருவாக ஆசைப்பட்டவர்.”
டார்வினிஸத்திற்கும் இந்து மத தத்துவத்திற்கு முள்ள ஒப்புமைகள்.
இந்துக்களால் போற்றப்படும் விஷ்ணுவின் தசாவதாரம் டார்வினிஸத்துடன் ஒத்துப் போகிறது.
தசாவதாரத்தை கருத்தில் கொள்ளும் போது டார்வின் வகுத்தளித்த கருத்துகள் முன்னமேயே இந்திஸத்தில் போதிக்கப்பட்டு வந்துள்ளது விளங்கும்.
முக்கிய வளர்ச்சி பருவத்தைக் கொண்டு முதல் 5 அவதாரங்களின் உருவ அமைப்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு தாய் தந்தை இல்லை. ஒவ்வொரு அவதாரத்திற்கும் நான்கு கைகள்(வாமன அவதாரத்தை தவிர). அவ்விலங்கு பருவங்கள் நான்கு கால் உயிரினங்கள்.
வாழ்க்கை நீரிலிரிலிருந்து தொடங்குகிறது. இவற்றின் வளர்ச்சி 600 மிலியன் – 400 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.
முதல் அவதாரம் : மச்ச அவதாரம் (மீன்)
வாழ்க்கை நீரிலிரிலிருந்து தொடங்குகிறது. இவற்றின் வளர்ச்சி 600 மிலியன் – 400 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.
இரண்டாம் அவதாரம்: கூர்மம் (ஆமை)
நீரிலிருந்து நிலத்தில் நடப்பவை (amphibians) வளர்ச்சி 100 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.
மூன்றாம் அவதாரம் : வராகம் (பன்றி) : தரையில் வாழும் பாலூட்டி விலங்கு (mammals) 60 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை.
நான்காவது அவதாரம் : நரசிம்மம் (மனித உருவில் உள்ள சிங்கம்) : பாதி மனிதன் பாதி சிங்கம் 30 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை
ஐந்தாவது அவதாரம்:வாமன (குள்ளமான கரடி) Homo Erectus : ஆயுதம் அற்ற இரண்டு காலில் நடக்கும் உருவம். காலம் 5மிலியன் முதல் 2மிலியன் ஆண்டுகளுக்கு முன்.
இந்த ஐந்து அவதாரங்ளுக்கு அடுத்து வரும் 5 அவதார தத்துவங்கள் மனித இனத்தின் படிபடியான நாகரீக வளர்ச்சியை விளக்குவதாகும். ஆதிகால மனிதன் முதலில் நிலத்தை உழுது பயிரத்தெரிந்து கொண்டான் இது பரசுராம அவதாரம்.[ Homo Sapiens (350,000-100,000 years ago)] ஏற்கலப்பையுடன் இருப்பது காண்க.
பின்னர் ஆடுமாடுகளை தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்த கற்றுக்கொள்கிறான். இது கிருஷ்ணவதாரம்( மாடு மேய்ப்பவர்.)
இறுதியில் சமுதாய ஆட்சிமுறை அதை பலப்படுத்த போர் பயிற்சி பெற்றார்கள் மனித பரம்பரையின் வளர்ச்சி சரித்திரம். பிற்பட்ட அவதாரங்களின் விளக்கம்.
இராம அவதாரத்தில் துணைப்பாத்திரமாக அதி புத்திசாலியாகவும், பலம் பொருந்திய அனுமன் (குரங்கு) சித்தரிக்கப்பட்டது ஏன் ? இதை பரிசீலிக்கும் பொழுது முதல் ஐந்து அவதாரங்கள் முன்பே வெளிப்படுத்த பட்ட பின்னரே அடுத்த அவதாரங்கள் விளக்கப்படுகின்றன. அந்த விளக்கத்தின் போதே சிங்கத்திலிருந்து மனித உருவம் தோன்றவில்லை குரங்கினத்திலிருந்தே மனித இனம் தோன்றியது இதை முக்கிய தகவலாக இடை செருகப்பட்ட முக்கிய கதாபாத்திரமே அனுமன் எனவிளங்கிக்கொள்ளலாம்.
செயற்கை மழையும் யாகமும்! மறைந்த உண்மைகள்
செயற்கை மழை!
செயற்கை மழையைப்பற்றி எமது பாணியில் பார்க்கலாம்…


செயற்கை மழையைப்பற்றி பேசும் போது நாம் ஒன்றைக்கவணித்தாக வேண்டும், செயற்கை மழை என்பது உண்மையில் முற்று முழுதாக செயற்கை மழை என்று சொல்லிவிட முடியாது!
ஆம், இன்னோர் இடத்தில் பெய்யவேண்டிய மழை மேகங்களை வலுக்கட்டாயமாக தேவைப்படும் இன்னோர் இடத்தில் கூட்டி அவற்றிற்கு ஊக்கிகள் மூலம் மழை மேக கருக்கட்டல்களை உருவாக்கி பெய்விப்பதே இந்த செயற்கை மழை!
சிம்பிலாக சொல்லவேண்டும் என்றால், மேகங்கள் மீது ஊக்குவிக்கும் இரசாயனங்களை தெளித்து மழையை பெய்விப்பது செயற்கை மழை என்று சொல்லிவிடலாம். ( இந்த பதிவிற்கு அது போதும்.)
சரி, 1970 களில் செயற்கை மழை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு விட்டது. அதில் என்ன மர்மம் இருக்கிறது வரலாறு இருக்கிறது என்பதை இனிப்பார்க்கலாம்.

அதில் எல்லாம்… நாட்டில் மழை பெய்யவில்லை என்றது. உடனே அரசன் வழமை போல தனது மந்திரியின் தலையைப்பிடிக்க அவர் பூசாரிகளில் கையைப்பிடிக்க அதன் விளைவாக “யாகம்” என்ற பெயரில் பெரியதோர் கிடங்கில் பல வகை மரங்கள் திரவியங்களைப்போட்டு எரித்து புகைவரவைப்பார்கள். ( புகைவருவதற்கு மந்திரம் ஏன் என்பது தெரியவில்லை…. ஒரு வேளை நாம் பாட்டு பாடிட்டே வேலைகள் செய்வது போல் அவர்களும் ஏதோ முனுமுனுத்திருக்கலாம். அல்லது “பூசாரிகள்” மந்திரம் ஓதினால் தான் புகைவரும் என்ற ரீதியில் பில்டப் பண்ணி மந்திரம் சொல்லி இருக்கலாம். ( அப்படி செய்யாவிட்டால் அடுத்த கட்டத்தில் மந்திரி தானே இந்த திரவியங்கள் மரங்களை எரித்து புகை வரவைத்திருப்பார். பூசாரிகளின் தேவை இல்லாமல் போய் இருக்கும். பிழைப்பும் போய் இருக்கும்.) )
புகை என்றவுடனேயே பலருக்கு தெரிந்திருக்கும் நான் என்ன சொல்லவெருகிறேன் என்று!
ஆம், நாம் தற்போது செயற்கை இரயானங்களை விமானங்கள் மூலம் மேகங்களுக்கு மேலாக கொண்டு சென்று தெளிப்பதன் மூலம் மேகங்களை ஒன்றுகூட்டுகின்றோம். ஒரு வேளை அவர்கள் அந்த புகையை வானத்தை நோக்கி நகர்த்துவதன் மூலம் மேகங்களை ஒன்றுகூட்டி இருக்கலாம்!
மேகங்களை ஒன்று கூட்டக்கூடிய சக்தியுள்ள புகையை உருவாக்கத்தான் விசேட மரங்களும் திரவியங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்!
இன்று இரசாயன திரவியங்கள் மூலம் கூட்டப்பட்டு பெய்யப்படும் மழை, அன்று “யாகங்கள்” என்ற பெயரில் பெய்விக்கப்பட்டிருக்கும்.
ஆனால், நாம் “யாகம்” என்ற சொல்லையே கிட்டத்தட்ட காமெடி சொல்லாக்கி விட்டோம். நான் மேலே சொல்லி இருப்பவை கூட பலருக்கு காமெடி அல்லது இந்து மதத்தை பரப்புவனின் பதிவாக தெரியலாம்.

அந்த பஞ்சத்திற்கு செய்யப்படும் யாகம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டளவில் ஒரு ஆராய்ச்சி முடிவு விளக்கம் கொடுக்கப்பட்டது.
அதாவது, யாகம் செய்யப்பட்ட இடத்தை அன்மித்து விதைக்கப்பட்ட தானியங்கள் சுமார் 2000 மடங்கு அதிவேக ஆரோக்கிய வளர்ச்சியை காண்பித்துள்ளன! சூழலில் தானியங்களை பாதிக்க கூடிய கிருமிகள் அழிக்கப்பட்டிருந்தன!
– இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.
( இவ்வொரு யாகத்திலும், ஒவ்வொரு விதமான திரவியங்கள் பயன்படுத்தப்படுவதுண்டு!)
ஆனால் இப்போது யாகம் ஏன் செய்யப்படுகிறது என்பதை மறந்து, பூட்டிய கோவிலுக்குள் வாய்க்கு வந்ததை ஐயர் முனுமுனுத்துக்கொண்டு கையில் கிடைத்த வாசனை பொருட்களை எரிக்க அந்த வாசத்தை புனிதமாக கருதி பணத்தை கொடுத்து யாகம் செய்து கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் :)
ஞாபக மறதியை உண்டு பண்ணும் ஸ்மார்ட் போன்கள் !
இதில் முக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் எதையாவது நம் மொபைல் சாதனத்தில் குறித்து வைக்கும்போது தானாகவே நம் மூளை அந்த விஷயத்தை மனதில் பதிய வைக்க மறுக்கிறது. கேஸ்பர்ஸ்கை லேப் ஆராய்ச்சியின் படி 16 முதல் 24 வயதிற்குள் இருக்கும் நபர்களில் 25% மக்கள் தங்கள் ஸ்மார்ட் போனை தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற கவலையில் இருந்தனர். ஏனெனில் அவர்கள் அவர்களின் முக்கிய தகவல்கள் மற்றும் மொபைல் எண்களையும் புகைபடங்களையும் பேக் அப் செய்யாமல் இருந்தனர்.
இந்த பிரச்னைக்கு எந்தெந்த விசயங்களுக்கு மக்கள் மூளையை உபயோகபடுத்தாமல் தங்கள் ஸ்மார்ட் போன் சாதனங்களை உபயோகபடுத்துகிறார்களோ அந்த அனைத்து தகவல்களையும் ஒரு மென்பொருளின் உதவி கொண்டு சேமித்து வைப்பதன் மூலம் தீர்வுகள் காணலாம் என சைபர் நிருவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு .கிரிஸ் டாகட் தீர்வு கூறியுள்ளார் . கூடுதலாக இந்தமாதியான மென்பொருள்களும் கை கொடுக்கவில்லை என்றால் உங்கள் அனைத்து தேவைப்படும் தகவல்களையும் ஒரு சிறு மெமரி கார்டில் சேமித்து வைப்பது சிறந்ததே ! மேலும் கூடுமானவரை சில முக்கிய தகவல்களுக்கு போனில் மட்டுமல்லாமல் மனதிலும் நிலை நிறுத்தி வைப்பது ஆபத்து காலங்களில் நமக்கு கைகொடுக்கும். ஏனெனில் மனித மூளை மட்டுமே எப்போதும் யாராலும் திருட முடியாத ஒன்று !
Tuesday, November 10, 2015
கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் தோன்றாமல் தடுப்பது எப்படி? (கணினி, ஸ்மார்ட் போன்)
எனவே இணையத்தின் மூலம் நாம் தகவல்களை தேடிப்பெருவதற்கு பிரதானமாக பயன்படுத்தக் கூடிய கூகுள் தேடியந்திரத்தின் மூலம் தகவல்களை தேடும் போது ஆபாசமான தகவல்கள் தோன்றாமல் தடுத்துக் கொள்ளவும் முடியும்.
இதனை மேற்கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.
நீங்கள் இணையத்தை உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் பயன்படுத்துபவர் எனின்.
- உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள இணைய உலாவியை பயன்படுத்தி கூகுளின் முகப்புப்பக்கத்திற்கு செல்க.
- இனி குறிப்பிட்ட பக்கத்தில் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Settings ===> Search Settings என்பதை சுட்டுக.
- பின்னர் தோன்றும் சாளரத்தில் SafeSearch Filters என்பதற்குக் கீழ் இருக்கும் Filter explicit results என்பதை தெரிவு செய்க.
- பின்னர் குறிப்பிட்ட பக்கத்தின் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Save என்பதை சுட்டி வெளியேறுக
- உங்கள் கணினியில் இருக்கும் இணைய உலாவியைபயன்படுத்தி https://www.google.lk/preferencesஎனும் பக்கத்திற்கு செல்க.
- பின் குறிப்பிட்ட பக்கத்தில் இருக்கும் SafeSearch Filters என்பதற்குக் கீழ் இருக்கும் Turn On SafeSearch என்பதை Tick செய்க.
- இனி குறிப்பிட்ட பக்கத்தின் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Save என்பதை சுட்டுக.















