BREAKING NEWS

Saturday, February 27, 2016

வாட்ஸ்அப் மூலம் ஒரே நேரத்தில் 250 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தகவல்களை பகிர்வது எப்படி?

மாதாந்தம் 1 பில்லியன் பயனர்களைக் கொண்ட மிகப்பெரியதொரு மெசேஜிங் சேவையே வாட்ஸ்அப் சேவையாகும்.

வாட்ஸ்அப் உதவிகள்

இதனை எமது தேவைக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இதில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன.
என்றாலும் நாம் அனைவரும் அனைத்து வசதிகளையும் அறிந்து வைத்துள்ளோம் என உறுதியாக கூறிவிட முடியாது.



எமது முன்னைய பதிவின் மூலம் "வாட்ஸ்அப் செய்தியை அனுப்பியவர் அறிந்து கொள்ளாத வகையில் படிப்பது எப்படி?" என்பதை விளக்கியிருந்தோம்.

அதேபோல் அதிகமானவர்களால் அறியப்படாத வசதியே வாட்ஸ்அப் செயலியில் தரப்பட்டுள்ள Broadcast எனும் வசதியும் ஆகும்.

இந்த வசதி மூலம் ...

ஒரே நேரத்தில் 256 வரையான நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் எந்த ஒன்றையும் அனுப்ப முடியும்.


பண்டிகை தினத்தின் போது அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதற்கு, நண்பர்கள் தினத்தின் போது நண்பர்களை பாராட்டுவதற்கு, ஒரு எச்சரிக்கை செய்தியை பலருக்கு தெரிவிக்க வேண்டிய தேவைகள் உள்ள போது என பல்வேறு சந்தர்பங்களில் இந்த வசதி எமக்கு பயனளிக்கும்.

இந்த வசதியை பயன்படுத்துவது எப்படி?



1. இந்த வசதியை பயன்படுத்துவதற்கு வாட்ஸ்அப் செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கொண்ட மெனு பட்டனை சுட்ட வேண்டும்.

2. பின்னர் தோன்றும் சாளரத்தில் New Broadcast என்பதை சுட்ட வேண்டும்.



3. இனி தோன்றும் இடைமுகத்தின் மூலம் நீங்கள் செய்தியை அனுப்ப வேண்டிய நபர்களை தெரிவு செய்த பின் குறிப்பிட்ட சாளரத்தின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Create என்பதை அழுத்த வேண்டும்.



4. இனி நீங்கள் தெரிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் ஒரே நேரத்தில் புகைப்படம், வீடியோ கோப்புக்கள், குரல் பதிவுகள் என எந்த ஒன்றையும் பகிர முடியும்.

அவ்வளவுதான்.

Tuesday, February 23, 2016

Facebook Messengerல் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை பயன்படுத்துவது எப்படி?

எமது உறவினர்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மெசேன்ஜர் மூலமாக மிக இலகுவாக எமது எண்ணங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடிகிறது.


பேஸ்புக் மெசேஞ்சர்
அந்தவகையில் உலகளாவிய ரீதியில் பேஸ்புக் மெசேன்ஜர் சேவையை மாதாந்தம் 800 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


கடந்த வருடம் பேஸ்புக் கணக்கு இன்றியே பேஸ்புக் மெசேன்ஜர் சேவையை பயன்படுத்துவதற்கான வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.


தற்போது பேஸ்புக் மெசேன்ஜரில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை பயன்படுத்துவதற்கான வசதியையும் பேஸ்புக் நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது.


அதாவது பேஸ்புக் மெசேன்ஜர் செயலியில் புதியதொரு கணக்கை  பயன்படுத்த வேண்டும் எனின் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் கணக்கில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் இல்லை.



இதன் மூலம் உங்கள் நண்பர்கள் சகோதர சகோதரிகள் போன்ற அனைவருக்கும் ஒரே ஸ்மார்ட் போனை பயன்படுத்தி மெசேன்ஜர் செயலியை பயன்படுத்தவும் முடியும்.

இந்த வசதியை பெற நீங்கள் செய்ய வேண்டியது இதன் புதிய பதிப்பை உங்கள் ஸ்மார்ட் போனுக்கு நிறுவிக்கொள்ள வேண்டியது மாத்திரமே ஆகும். 

நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவர் எனின் ஆப் ஸ்டோர் மூலமும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர் எனின் ப்ளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கிக் கொள்ளலாம்.



பின்னர் மெசேன்ஜர் செயலியின் செட்டிங்க்ஸ் பகுதியில் தரப்பட்டுள்ள Accounts என்பதை சுட்டுவதன் மூலம் புதிய கணக்குகளை இணைத்துக் கொள்ள முடியும்.

அவ்வளவுதான்.

Monday, December 14, 2015

உன் தகுதியை நீயே உரக்கச் சொல் – ஜூலியஸ் சீஸர்

Julius Ceasar : 
கி.மு. 75-ம் வருடம். சட்ட திட்டங்களில் நிபுணத்துவம் பெறுவதற்காக, கிரேக்க நாட்டுக்கு கடல் வழிப் பயணமானார் 25 வயது இைளஞரான ஜூலியஸ் சீஸர். எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த அனைவரும் கடற்கொள்ய‌ளயர்களால் பிடிக்கப்பட்டார்கள். ‘20 தங்கக் காசுகள் கொடுத்தால், உங்கள் நபைர விடுதைல செய்கிறோம்’ என ஒவ்வொருவரின் நாட்டுக்கும் தனித்தனியாகத் தகவல் அனுப்பினார்கள். உடேன ஸீஸர் கோபமாகி, ‘‘என் விலை 20 தங்கக்
காசுகள்தானா?! என்னைக் கேவலப்படுத்தாதீர்கள். 50 தங்கக் காசுகளாவது கேளுங்கள்’’ என்றார் தோரைணேயாடு. கொள்ளையர்கள் அலட்சியமாகச் சிரிக்க, ‘‘சிரிக்காதீர்கள்.
உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட என்னால் முடியும்’’ என்றார். கொள்ளையர்கள் மேலும் சிரித்தார்கள். சக பயணி ஒருவர், ‘‘எதற்காக இப்படி உன்னை நீயெ உயர்வாகப் பேசி கொள்கிறாய்! அது உனக்கே ஆபத்தாக முடியலாம்’’ என்று எச்சரிக்க, ‘‘நான் யார் என்பைத நான்தான் சொல்ல வேண்டும். எனக்காகப் பிறர் விளம்பரம் செய்யமாட்டார்கள். அரச நீதி நூல்களில் சொல்லியிருப்பைதத்தான் நான் கைடப்பிடித்து வருகிறேன்’’ என்றார் சீஸர்.
பின்னர், 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்து வெளியே வந்ததும், வரம் மிக்க ஆட்கைளத் திரட்டிக்கொண்டு போய் கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு, தான் சொன்னது போலவே அவர்கள் அத்தைன பேரையும் கழுத்தை அறுத்துக் கொன்றார். இந்த வெற்றியைப் பெரும் பொருட்செலவு செய்து கொண்டாடினார். ‘‘ஏன் இப்படிச் சுய தம்பட்டம் அடிக்கிறர்கள்?’’ எனப் பிறர் கேட்டேபாது, ‘‘உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே!’’ என கூறினார்.
சுமார் ஒன்பது ஆண்டுகள் நடந்த இந்த ‘கவுல்’ போராட்டத்தில், சுமார் இருபது லட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து லட்சம் பேர் அடிமைகளாக விற்கப்பட்டனர். இந்தப் போர், சீஸ‌ருக்கு செனட் சைபயிலும், மக்கள் மனதிலும் நிரந்தர இடத்தையும், பெரும் வரன் என்கிற புகைழயும் பெற்றுத் தந்தது.அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை ஜூலியஸ் சீஸர். ரோம் நகர அதிகாரத்தில் இருந்த மரியஸ், சஸரின் உறவினர். எனேவ, சஸரால் மிக எளிதாக பைடத் தைலவராகி, போர்களில் பங்கேற்று வெற்றிகள் குவிக்க முடிந்தது. மரியஸுக்குப் பின் ஆட்சியைப் பிடித்த ‘சுல்லா’வின் பேத்தியைத் திருமணம் செய்துகொண்டு, செனட் சைபயில் முக்கிய இடம் பிடித்தார் சஸர். மிகப் பெரரும் செலவில் பிரமாண்டமான ஸ்டேடியம் அமைத்து, ‘அடிமைகளின் மரண விளையாட்டு’ நடத்தி, மக்களிடம் பெரும் புகழ் பெற்றார். கி.மு.58-ல் ஐேராப்பிய கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் இடம்பெயர்ந்து, ‘கவுல்’ நோக்கி வருகிறார்கள் என்றதும், அவர்களால் ரோம் நகருக்கு ஆபத்து வருமெனப் பைடயுடன் கிளம்பினார் சீஸர்.
ரோம் நகரின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாகச் செயல்படத் தொடங்கினார் ஜூலியஸ் சீஸர். ரோமன் காலண்டர் மாற்றியைமக்கப்பட்டது. நகெரங்கும் சஸரின் சிலைகள் நிறுவப்பட்டன. நாணயங்களில் அவரது உருவம் பொறிக்கப்பட்டது. தன் புகழ் இந்த பூமி உள்ளவைர நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, பெரும் செலவுகள் செய்தார் சீஸர். அவைர இனியும் விட்டுவைத்தால், ரோம் சரழிந்துவிடும் என அவருக்கு வேண்டப்பட்டவர்கள் சிலேர கொல்லத் துணிந்தார்கள்.
எல்லோரும் அவைரக் கத்தியால் குத்த, மகன் போல் தான் நினைத்திருந்த புரூட்டஸிடம் ஓடினார் சஸர். அவனும் கத்தியெடுத்துக் குத்தேவ, ‘‘யூ டூ புரூட்டஸ்’’ என்று பதறித் துடித்தபடி உயிரைவிட்டார். ஜூலியஸ் சஸர் விமர்சனத்துக்கு உரியவராக இருந்தாலும், அவைரப் புகழின் உச்சியில் ஏற்றிவைத்தது, ‘உன் தகுதியை நேய உரக்கச் சொல்ல். பிறருக்காகக் காத்திருக்காதே!’ என்கிற அவரது மந்திரச் சொல்தான்.

Sunday, December 13, 2015

உங்கள் Facebook ஐ கொண்டு உங்களை அறிந்துகொள்ள ஒரு மென்பொருள். – அறிமுகம்

கேம்பிறிட்ஜ் (Cambridge) பல்கலைகழகம் புதிய இணைய மென்பொருளொன்றை  அறிமுகம் செய்துள்ளது.
Facebook இல் நீங்கள் இதுவரை செய்த likes ஐ வைத்து உங்கள் மனோவியல் தொடர்பான ஒரு அறிக்கையை இவ் மென்பொருள் சமர்ப்பிக்கும்.
முக்கியமான ஐந்து பிரிவுகளாக இது பயணர்களை வகைப்படுத்துகிறது. நண்பர்கள் மற்றும் வேலை சகாக்கள் ஒருவரின் மனோனிலையை தீர்மானிப்பதை விட இது துல்லியமாக தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.
‘Apply Magic Sauce’ என அழைக்கப்படும் இவ் மென்பொருளில் உங்கள் Facebook பயணர் கணக்கு மூலம் நுழைந்து அறிக்கையை பெறலாம்.
image

எந்த device இலும் அழிந்த தரவுகளை மீட்கலாம்.


tamil technologyகணினியில் அழிந்த தரவுகளை மீட்டெடுக்க உதவும் ஒரு மென்பொருள். Portable மென்பொருளாக உள்ளமையால் கணினியில் நிறுவத்தேவையில்லை. இலகுவாக USB (விரலி) களில் கொண்டு செல்லலாம்.
சிறப்புக்கள் :
  • எந்தவகை வந்தட்டுக்களுக்கும் இயைபுடையது. (ATA, SATA, SCSI, USB, IEEE1394.)
  • iPod இல் இருந்தும் தரவுகளை மீட்க உதவும்.
  • FAT12, FAT16, VFAT, FAT32, NTFS/NTFS5, EXT2 மற்றும் EXT3 போன்ற இயக்கங்களுக்கு ஏற்புடையது.
  • USB, digital cameras, MP3 player களில் இருந்தும் தரவுகளை மீட்க உதவுகிறது.
  • இலகுவான பாவனை அமைப்பு.
  • ஒரே சொடுகில் தரவுகளை மீட்க முடியும்.
அளவு :  9.5 Mb
தரவிறக்க : source1   

Friday, December 11, 2015

இணையமில்லா நேரத்திலும் முகநூலை அணுகலாம்



இணையமில்லா சேவைகளை  கூகுளின் வரைபட பயன்பாட்டில் தொடங்கியது முதல், அந்த வரிசையில் அடுத்தகட்டமாக முகநூல் அடுத்தபடியாக இணையமில்லாமல் முகநூலை அணுகும் சிறப்பை பயனர்களுக்கு தந்துள்ளது. ஆகையால் இணைய இணைப்புமெதுவாக இருக்கும்போதிலோ அல்லாது நெட்வொர்க்குகள் கிடைக்காத  தருணத்திலோ முகநூலில் செய்திகளை  எழுதலாம் . மற்றும் செய்திகளுக்கு கருத்துகளையும் தெரிவிக்கலாம். அவையனைத்துமே சரியான இணையதள இணைப்பை  பெற்றவுடன்  முகநூளில்  வெளியிடப்படும்.  இதனால் 2G  இணைப்பையோ அல்லது குறைவான டேடாக்களை  மட்டுமே கொண்ட பயனர்களுக்கும் , இணையத்தை அணுக முடியாமல் இருக்கும் பயனர்களுக்கும் பெரிதாக கைகொடுக்கும். முகநூளின் இத்தகைய முயற்சியால்   நாம் அவ்வப்போது வெளியிட நினைக்கும் கருத்துக்கள் அனைத்தையும் உடனுக்குடன்  ஒரு டைரியில் குறித்து வைப்பது  போன்று  குறித்து வைத்து பின் இணையமுள்ள நேரங்களில் வெளியிடலாம்.

facebook-android

உதாரணமாக ஒருவரின்    பிறந்த நாளன்று வாழ்த்து சொல்ல விரும்புகையில் அவர்களிடம்  இணையமில்லாத   போது    நம் கருத்துகளையும் வாழ்த்துகளையும் எழுதி  வைத்தால் அவற்றினை  இணையத்தினை  அணுகும்போது   செய்திகள் வெளியிடப்படும். இதனால் குறிப்பிட்ட    அந்த நேரத்தில் இணையமில்லாததால் செய்திகளை அனுப்ப முடியவில்லை என்பதனை புரிந்து கொள்ள முடியும். பயனங்களின் போதான நேரங்களில்   பெரும்பாலாக இணையத்தை அணுக முடியாது. அந்த மாதிரி சமயங்களில்  கண்டிப்பாக நேரத்தை பயனுள்ளதாக செலவிட உதவும். இதனால் முன்பை விட பயனர்கள் அதிக நேரத்தினை முகநூளில் செலவிட வாய்ப்புள்ளது.

Tuesday, December 1, 2015

அடாப்டின் உதவியுடன் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிற சொந்த தகவல்களை மறைக்கலாம் :

 
Back To Top
Copyright © 2014 Tamil Explore. Designed by OddThemes