Saturday, February 27, 2016
வாட்ஸ்அப் மூலம் ஒரே நேரத்தில் 250 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தகவல்களை பகிர்வது எப்படி?
Tuesday, February 23, 2016
Facebook Messengerல் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை பயன்படுத்துவது எப்படி?
Monday, December 14, 2015
உன் தகுதியை நீயே உரக்கச் சொல் – ஜூலியஸ் சீஸர்
Sunday, December 13, 2015
உங்கள் Facebook ஐ கொண்டு உங்களை அறிந்துகொள்ள ஒரு மென்பொருள். – அறிமுகம்
எந்த device இலும் அழிந்த தரவுகளை மீட்கலாம்.
- எந்தவகை வந்தட்டுக்களுக்கும் இயைபுடையது. (ATA, SATA, SCSI, USB, IEEE1394.)
- iPod இல் இருந்தும் தரவுகளை மீட்க உதவும்.
- FAT12, FAT16, VFAT, FAT32, NTFS/NTFS5, EXT2 மற்றும் EXT3 போன்ற இயக்கங்களுக்கு ஏற்புடையது.
- USB, digital cameras, MP3 player களில் இருந்தும் தரவுகளை மீட்க உதவுகிறது.
- இலகுவான பாவனை அமைப்பு.
- ஒரே சொடுகில் தரவுகளை மீட்க முடியும்.
தரவிறக்க : source1
Friday, December 11, 2015
இணையமில்லா நேரத்திலும் முகநூலை அணுகலாம்
இணையமில்லா சேவைகளை கூகுளின் வரைபட பயன்பாட்டில் தொடங்கியது முதல், அந்த வரிசையில் அடுத்தகட்டமாக முகநூல் அடுத்தபடியாக இணையமில்லாமல் முகநூலை அணுகும் சிறப்பை பயனர்களுக்கு தந்துள்ளது. ஆகையால் இணைய இணைப்புமெதுவாக இருக்கும்போதிலோ அல்லாது நெட்வொர்க்குகள் கிடைக்காத தருணத்திலோ முகநூலில் செய்திகளை எழுதலாம் . மற்றும் செய்திகளுக்கு கருத்துகளையும் தெரிவிக்கலாம். அவையனைத்துமே சரியான இணையதள இணைப்பை பெற்றவுடன் முகநூளில் வெளியிடப்படும். இதனால் 2G இணைப்பையோ அல்லது குறைவான டேடாக்களை மட்டுமே கொண்ட பயனர்களுக்கும் , இணையத்தை அணுக முடியாமல் இருக்கும் பயனர்களுக்கும் பெரிதாக கைகொடுக்கும். முகநூளின் இத்தகைய முயற்சியால் நாம் அவ்வப்போது வெளியிட நினைக்கும் கருத்துக்கள் அனைத்தையும் உடனுக்குடன் ஒரு டைரியில் குறித்து வைப்பது போன்று குறித்து வைத்து பின் இணையமுள்ள நேரங்களில் வெளியிடலாம்.
உதாரணமாக ஒருவரின் பிறந்த நாளன்று வாழ்த்து சொல்ல விரும்புகையில் அவர்களிடம் இணையமில்லாத போது நம் கருத்துகளையும் வாழ்த்துகளையும் எழுதி வைத்தால் அவற்றினை இணையத்தினை அணுகும்போது செய்திகள் வெளியிடப்படும். இதனால் குறிப்பிட்ட அந்த நேரத்தில் இணையமில்லாததால் செய்திகளை அனுப்ப முடியவில்லை என்பதனை புரிந்து கொள்ள முடியும். பயனங்களின் போதான நேரங்களில் பெரும்பாலாக இணையத்தை அணுக முடியாது. அந்த மாதிரி சமயங்களில் கண்டிப்பாக நேரத்தை பயனுள்ளதாக செலவிட உதவும். இதனால் முன்பை விட பயனர்கள் அதிக நேரத்தினை முகநூளில் செலவிட வாய்ப்புள்ளது.
Tuesday, December 1, 2015
அடாப்டின் உதவியுடன் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிற சொந்த தகவல்களை மறைக்கலாம் :
பிடிக்காத அல்லது வேண்டாத ஒரு நபரின் தொடர்பிலிருந்து விலகி இருக்க அவர்களது எண்ணை பிளாக் லிஸ்ட்டில் போடுவது என்பது அனைவரும் அறிந்ததே ! அதுபோலவே நமது சொந்த மொபைல் போனில் ஒருவருக்கு தகவல் அனுப்பும்போது, நம் சம்மந்தப்பட்ட சில விசயங்களை மற்றவர்கள் பார்ப்பதை நாம் விரும்புவதில்லை.அதற்காகவே தனி மனித சுய பாதுகாப்பு கருதியேஅடாப்ட்டின் உதவி கொண்டு பிறருக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிற தகவல்களை மட்டும் மறைத்து அனுப்பலாம்.
உதாரணமாக நாம் புதிதாக மாற்றிய வீட்டு முகவரியை நண்பருக்கு அனுப்பும்போது அவர்களின் சாதனத்தை மூன்றாமவர் ஒருவர் பார்க்கும்போது அதனை எளிதில் எடுத்து தவறாக உபயோகிக்க வாய்ப்புள்ளது. அதனால் இது போன்ற பிரச்சனைகளுக்காகவே அடாப்ட் ஒரு நல்ல வழியினை உருவாக்கித் தந்துள்ளது.







